இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ.பன்னீர்செல்வம் தாக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்

3/22/2023 5:51:30 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் என தமிழகம் முழுவதும் இரு அணிகளாக பிரிந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டியது செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த எடப்பாடி அணி முடிவு செய்தது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார். இதனால் அவர் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமனுவாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைக்கு தடை விதிக்காமல், தேர்வு அறிவிப்புக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் இன்று விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வமும் தனியாக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்குடன் சேர்த்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன. வழக்கு தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் இரு தரப்பும் காரசார விவாதங்களை முன் வைத்துள்ளன.


மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com