இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சமூக நீதி மண்ணான தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை பேண அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

3/23/2023 5:38:31 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ‘‘கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் காதலியும் தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கடந்த 21ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் கிடாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் சரண்யா என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தையான சங்கர், தனது உறவினர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஆயுதத்தால் தாக்கி ஜெகனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் காவல்துறையினரின் விசாரணையில் சங்கர் அதிமுக கிளை செயலாளராக இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. எனினும் இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க திமுக ஆட்சியில் தொடர்ந்து காவல்துறை சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நீதி மண்ணான தமிழகத்தில் இது போன்ற சம்பவங்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் மனித நேயத்தை பேணி காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே கொலையாளி சங்கர் அதிமுக கிளை செயலாளர் என கூறியதற்கு அதிமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் முனுசாமி, கோவிந்தசாமி, அருண்மொழி தேவன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘காவல்துறையின் விசாரணையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளை மாற்று கருத்து வரும் எனில் அந்தத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு திருப்பி பேரவையில் வாசிக்கப்படும் எனவும்” தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com